நெடு கவிதைகள் Leave a Comment / For Him and Her / By yathr233 என் இதயக் குடுவைக்குள்உன்னை இட்டு விட்டேன், விளிம்பு வழி ஏற முயற்சிக்காதே – என்விழி நீர் வழிந்து கொண்டேயிருப்பதால்வழுக்கி விழுவாய்.. – என்இதயக் கடல் தாண்டி கரை ஏற முயலாதேஎன் உயிர் கரைந்து விடும் நிரந்தரமாய்… கதிர் ஒளி பாயும் உன் கண்களைவெளி உலகிற்காய் திறக்காதேசதிராடும் என் இதயத்திற்குவிடியாத இரவாகி விடும்.. வேறு என்ன செய்ய என யோசிக்காதே… (அ) காதல் cork கொண்டுஇறுக அடைத்த என் இதயக் கூட்டுக்குள்அடைந்து கொண்டு அடை காத்துக் கொண்டேயிரு – என்உயிர்க் கருவை, வாழ்நாள் முழுவதுமாக… 5/5 Click here என் போர்வை முழுக்க உன் நெடி,உயிரோடு கலந்த அந்த நொடியிலிருந்து.. நம் போர்வை வீட்டுக்குள்உன் இதழ்ப் பேனாவால்என் இதழ்க் காகிதத்தில்வரைந்த கடிதங்கள் ஆயிரம்.. ஆனால் பதில் மடல் தருமுன்பேபடிக்காமல் ஏனடா மறைந்தாய்? கலவி கொண்ட உயிர்மெய் எழுத்தை ஏந்திகாற்றில் படபடத்துக் கொண்டேயிருக்கிறதுஎன் இதழ்க் காகிதம்!!! 5/5 Click here ஒரு நிமிடத்தில்சொல்லி விட்டேன்உன் மீதான காதலை.. ஆனால்அதை நிரூபிக்கத்தான்ஒரு ஜென்மமேவேண்டியதாய் இருக்கிறது.. ஆயுளைப் புதுப்பிக்கும்அரசு அலுவலகம் ஏதும்அருகில் உள்ளதா?இன்னுமொரு ஜென்மம் வேண்டும் எனக்கு.. In a minute I told you My Love for you.. But Just to prove it A birth it is necessary.. Any government office Is it nearby to Rejuvenates life? I want another life to prove my Love…. 5/5 Click here